Begin typing your search above and press return to search.
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை மதுக்கடைகளுக்கு விடுமுறை
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மகாவீர் ஜெயந்தியைமுன்னிட்டு நாளை 14ம் தேதி வியாழக்கிழமை அனைத்து மதுக்கடைகள், பார்கள் மற்றும் லைசென்ஸ் பெற்ற பார்கள் அனைத்தையும் மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதையொட்டிடி, மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகள், பார்கள், லைசென்ஸ் பெற்ற பார்கள் அனைத்தையும் மூடவேண்டும். உத்தரவை மீறி மதுக்கடைகள் மற்றும் பார்களை திறந்தலோ, மறைமுகமாக மதுபாட்டில்களை விற்பனை செய்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.