/* */

கல்விக்காக ஸ்ரீ ஹயக்கிரீவருக்கு பேனா மாலை அணிவித்து சிறப்பு பூஜை

கல்வி அபிவிருத்திக்காக, நாமக்கல் ஸ்ரீ ஹயக்கிரீவருக்கு பேனா மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

HIGHLIGHTS

கல்விக்காக ஸ்ரீ ஹயக்கிரீவருக்கு பேனா மாலை அணிவித்து சிறப்பு பூஜை
X

மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்காக, நாமக்கல் ஸ்ரீ ஹயக்கிரீவர் சாமிக்கு பேனா மாலை அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

நாமக்கல் ராமாபுரம் புதூரில் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் மற்றும் சக்கரத்தாழ்வார் கோயில் உள்ளது. குதிரை முகம் கொண்ட, லட்சுமி ஹயக்ரீவர் கல்விக்கு அதிபதி, தொழில் அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குபவர். அவரை வழிபட்டால் கல்வி மற்றும் தொழில் அபிவிருத்தி உண்டாகும் என்பது நம்பிக்கை. மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டியும், அனைவருக்கும் செய்யும் தொழிலில் ஏற்படும் சங்கடங்கள் நீங்கி, தொழில் அபிவிருத்தி அடையவும் ஸ்ரீ ஹயக்ரீவருக்கு லட்சார்ச்சணை நடைபெற்றது. ஜெயராமபட்டர் தலைமையில் பட்டாச்சாரியார்கள் கலந்துகொண்டு யாகபூஜை மற்றும் லட்சார்ச்சணையை நடத்தினார்கள். இதையொட்டி சாமிக்கு தங்கக் கவசம் சார்த்தப்பட்டு, பேனா மற்றும் பென்சில் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இன்று வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் ஹயக்ரீவர் மகா யாகம் நடைபெறும். தொடர்ந்து 11 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்படும்.பின்னர் தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு, சுவாமிக்கு அணிவிக்கப்பட்ட பேனா மற்றும் பென்சில்கள் பிரசாதமாக வழங்கப்படும்.

Updated On: 21 April 2022 2:15 AM GMT

Related News