தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு 10ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி
தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், வருகிற 10ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு பேச்சு மற்றும் கட்டுரைப்போட்டிகள் நடைபெற உள்ளது.
HIGHLIGHTS
தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், வருகிற 10ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு பேச்சு மற்றும் கட்டுரைப்போட்டிகள் நடைபெற உள்ளது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என, முன்னாள் முதல்வர் அண்ணாவால் பெயர் சூட்டிய, ஜூலை 10ம் தேதியை தமிழ்நாடு நாளாக இனி கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இதை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட அளவில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
நாமக்கல் மாவட்டரத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கிடையே கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் வருகிற 10ம் தேதி திங்கள்கிழமை காலை 9.30 மணி முதல் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் முதன்மைக் கல்வி அலுவலரால் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.
இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ.5,00 வீதம் வழங்கப்படும். இப்போட்டிகளில் மாவட்ட அளவில் முதல்பரிசு பெறும் மாணவர்கள் சென்னையில் மாநில அளவில் நடடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.