வெண்ணந்தூரில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: மாவட்ட ஆட்சியர்
வெண்ணந்தூரில் நாளை (செப்.2ம் தேதி) மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
HIGHLIGHTS
வெண்ணந்தூரில் நாளை (செப்.2ம் தேதி) மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம், ராசிபுரம் அருகே வெண்ணந்தூர் தங்கசாலை செங்குந்தர் திருமண மண்டபத்தில் நாளை (செப்.2) நடைபெற உள்ளது.
சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குதல், கல்வி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான மாதந்திர உதவித்தொகை, வங்கிக்கடன், உதவி உபகரணங்கள், ஆதார் அட்டை பதிவு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு மற்றும் பிற அரசு உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.
சிறப்பு மருத்துவ முகாமில், எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு மருத்துவர், மனநல மருத்துவர், காது மூக்கு மற்றும் தொண்டை பிரிவு மருத்துவர், கண் சிகிச்சை பிரிவு மற்றும் குழந்தைகள் நல பிரிவு மருத்துவர்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்க உள்ளனர். முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுதிறனாளிகள் அடையாள அட்டை, 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ரேசன் கார்டு நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றைக் கொண்டுவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.