Begin typing your search above and press return to search.
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமங்களில் மண் மாதிரி சேகரிப்பு முகாம்
நாமக்கல்லில் ஒருங்கிணைந்த வேளாண்வளர்ச்சி திட்ட கிராமங்களில் மண் மாதிரி சேகரிப்பு முகாம் நடைபெறுகிறது.
HIGHLIGHTS
இதுகுறித்து நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அன்புச்செல்வி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் வட்டாரத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்வளர்ச்சி திட்டம் நடப்பாண்டு, கோனூர், பெரியகவுண்டம்பாளையம், மாரப்பநாய்க்கன்பட்டி, தளிகை, சிங்கிலிபட்டி, வேட்டாம்பாடி மற்றும் வீசாணம் ஆகிய பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட உள்ளது. தேர்வு செய்யப்பட்டுள்ள பஞ்சாயத்துகளில் உள்ள விவசாய நிலங்களில், இறவை பாசன நிலங்களில் இருந்து 2.5 ஹெக்டருக்கு ஒரு மண்மாதிரியும், மானாவாரி நிலங்களில் 10 ஹெக்டருக்கு ஒரு மண்மாதிரியும் எடுக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. முகாமில் மண்பரிசோதனை அலுவலர் சாரதா, உதவி வேளாண்மை அலுவலர் மாலதி மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் கோபால் ஆகியோர் கலந்து கொண்டனர் என தெரிவித்துள்ளார்.