/* */

திருப்பூர் மாவட்டத்துக்கு 250 கட்டுப்பாட்டு கருவிகள் அனுப்பி வைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இருந்து 250 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவிகள் திருப்பூர் மாவட்டத்திற்கு, போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்டத்துக்கு 250 கட்டுப்பாட்டு கருவிகள் அனுப்பி வைப்பு
X

நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில், பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள, எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்களை கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் இருந்து 250 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவிகள் திருப்பூர் மாவட்டத்திற்கு, போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு வைப்பறை அமைக்கப்பட்டுள்ளது. அதில், காலாண்டுக்கு ஒரு முறை மாவட்ட கலெக்டரால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு செய்யப்படுகிறது. அதன்படி, கலெக்டர் உமா, காலாண்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு ஓட்டுப்பதிவு கருவிகள் இருப்பில் உள்ளதை ஆய்வு செய்தார்.

மேலும், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, நாமக்கல் மாவட்டத்தில் இருந்து, திருப்பூர் மாவட்டத்திற்கு, 250 வாக்குப்பதிவு இயந்திர கட்டுப்பாட்டு கருவிகள் அனுப்பப்பட வேண்டியதையும் பார்வையிட்டார். அதையடுத்து, 250 கட்டுப்பாட்டு கருவிகள், திருப்பூர் மாவட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த ஆய்வின் போது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மாதவன், தனி தாசில்தார் திருமுருகன், தேர்தல் பிரிவு அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 27 Jun 2023 4:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்