திருப்பூர் மாவட்டத்துக்கு 250 கட்டுப்பாட்டு கருவிகள் அனுப்பி வைப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இருந்து 250 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவிகள் திருப்பூர் மாவட்டத்திற்கு, போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் இருந்து 250 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவிகள் திருப்பூர் மாவட்டத்திற்கு, போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு வைப்பறை அமைக்கப்பட்டுள்ளது. அதில், காலாண்டுக்கு ஒரு முறை மாவட்ட கலெக்டரால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு செய்யப்படுகிறது. அதன்படி, கலெக்டர் உமா, காலாண்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு ஓட்டுப்பதிவு கருவிகள் இருப்பில் உள்ளதை ஆய்வு செய்தார்.
மேலும், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, நாமக்கல் மாவட்டத்தில் இருந்து, திருப்பூர் மாவட்டத்திற்கு, 250 வாக்குப்பதிவு இயந்திர கட்டுப்பாட்டு கருவிகள் அனுப்பப்பட வேண்டியதையும் பார்வையிட்டார். அதையடுத்து, 250 கட்டுப்பாட்டு கருவிகள், திருப்பூர் மாவட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த ஆய்வின் போது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மாதவன், தனி தாசில்தார் திருமுருகன், தேர்தல் பிரிவு அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.