/* */

கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நல்லிபாளையத்தில் கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
X

பைல் படம்.

நாமக்கல் அடுத்த லக்கம்பாளையத்தை சேர்ந்தவர் பூபதி, இவரது மகன் தினேஷ்குமார் (17). அவர், நல்லிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார். பள்ளி விடுமுறை விடப்பட்டதால், அவர் சம்பவத்தன்று மதியம் 1 மணிக்கு, நல்லிபாளையத்தில் உள்ள வைத்தியலிங்கம் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார்.

அப்போது, கிணற்றில் தவறி விழுந்த தினேஷ்குமார், நீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த நாமக்கல் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று கிணற்றில் இருந்து மாணவர் உடலை மீட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 17 April 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  4. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  6. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  7. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  9. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...
  10. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை