/* */

அங்கன்வாடி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சங்க கூட்டத்தில் தீர்மானம்

நாமக்கல் மாவட்ட சிஐடியு அலுவலகத்தில், மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநாடு நடைபெற்றது.

HIGHLIGHTS

அங்கன்வாடி பணியாளர்களை பணி நிரந்தரம்  செய்யக்கோரி சங்க கூட்டத்தில் தீர்மானம்
X

நாமக்கல் மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநாட்டில், மாநில பொதுச் செயலாளர் டெய்சி பேசினார்.

நாமக்கல் மாவட்ட சிஐடியு அலுவலகத்தில், மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநாடு நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கண்ணகி தலைமை வகித்தார். துணைத்தலைவர் பாண்டிமாதேவி வரவேற்றார். சிஐடியு மாவட்ட செயலாளர் வேலுசாமி மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினார். சங்க மாநில பொதுச் செயலாளர் டெய்சி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

மாநாட்டில், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களை அரசு ஊழியராக்கி முறையான கால முறை சம்பளம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயலாளர் .ஜெயக்கொடி, பொருளாளர் பிரேமா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 March 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...