/* */

வேலைவாய்ப்பு மையத்தில் பதிவை புதுப்பிக்க கூடுதலாக 3 மாதம் சலுகை நீட்டிப்பு

வேலை வாய்ப்பு அலுவலக புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு கூடுதலாக 3 மாதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

வேலைவாய்ப்பு மையத்தில் பதிவை புதுப்பிக்க  கூடுதலாக 3 மாதம் சலுகை நீட்டிப்பு
X

நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் 2014, 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை மற்றும் 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் வேலை வாய்ப்புக்கான பதிவுகளில் ஏற்கனவே வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த நிலையில், மேலும் 3 மாதங்கள் சிறப்பு புதுபித்தல் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சலுகையின்கீழ் புதுப்பித்தல் பெற விரும்பும் பதிவுதாரர்கள் வருகிற 2.03.2022 தேதிக்குள் தங்களது பதிவை ஆன்லைன் மூலம் டிஎன் வேலைவாய்ப்பு ஜிஓவி.இன் என் வெப்சைட்டில் புதுப்பித்துக் கொள்ளலாம்.

வேலை வாய்ப்பு பதிவை, புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள், பதிவினை புதுப்பித்திருக்க வேண்டிய காலம் 1.1.2014 முதல் 31.12.2019 வரை இருந்தால், இந்த சிறப்பு சலுகை அவர்களுக்கு பொருந்தும். ஆன்லைன் மூலமாக சலுகையின் கீழ் புதுப்பிக்க இயலாதவர்கள், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்திற்கு, பதிவு அடையாள அட்டை மற்றும் அனைத்து கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை, ரேசன் கார்டு, சாதிச்சான்று ஆகியவற்றுடன் நேரிலோ, பதிவு அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். 1.03.2022-க்கு பின்வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 10 Dec 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்