நாமக்கல்லில்28ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
Employment News in Tamil -நாமக்கல்லில் 28ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
Employment News in Tamil -நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், வரும் 28ம் தேதி வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தனியார் நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. இம்மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 28ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. எனவே, தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்துகொள்ளலாம்.
இம்முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு மேனேஜர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர்வைசர், அக்கவுண்டன்ட், கேஷியர், டைப்பிஸ்ட், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்ட்டென்டு போன்றபணிகளுக்கு தேர்வுசெய்யவுள்ளனர். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாதவர், 12-ம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ (தொழிற் பழகுனர் பயிற்சி), டிராப்ட்ஸ்மேன், இன்பர்மேஷன், கம்யூனிகேஷன், எலக்ட்ரீசியின், மெசினிஸ்ட், மெக்கானிக், ஆட்டோ பாடி ரிப்பேர் மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி (ஜாவா, டேலி) முடித்த, ஆண்கள் மற்றும் பெண்கள் முகாமில் கலந்துகொள்ளலாம். மேலும், மேற்கண்ட கல்வித்தகுதி இல்லாமல் மற்ற வகையில், அனைத்துவித கல்வித் தகுதி உள்ளோரும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
மேலும் முகாமில், வேலைவாய்ப்பு உதவி தொகை திட்டத்திற்கான படிவம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும் இலவச திறன் பயிற்சிகளில் சேர பதிவும் ஆலோசனையும் வழங்கப்படும். இம்முகாமில் பங்குபெறும் வேலையளிப்போரும், வேலைநாடுநரும் எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. சேவை முற்றிலும் இலவசம். இந்த வேலை வாய்ப்பு முகாம் மூலம் பணி வாய்ப்பு பெற்றோரின், வேலை வாய்ப்பு மையப் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
எனவே தகுதியும், விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் நாளை 28ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நாமக்கல், மோகனூர் ரோட்டில் உள்ள, மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இந்த முகாமில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தனியார் நிறுவனங்களால் பணி ஆணை வழங்கப்படும். முகாமில் பங்கேற்க உள்ள இளைஞர்கள் கொரோனா விதிமுறைகளைக் கடைபிடித்து, மாஸ்க் அணிந்து கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயாசிங் அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2