சேந்தமங்கலம் வளையப்பட்டி பகுதியில் வரும் 15ம் தேதி மின்தடை
சேந்தமங்கலம் வளையப்பட்டி பகுதியில் வரும் 15ம் தேதி மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
HIGHLIGHTS
வளையப்பட்டி, சேந்தமங்கலம் பகுதிகளில் வருகிற 15ம் தேதி மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொõறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி துணை மின் நிலைய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் வருகிற 15ம் தேதி மின்சாரம் தடை செய்யப்படும். இதனால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை, வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவந்திப்பட்டி, குரும்பப்பட்டி, பொம்மசமுத்திரம், கனவாய்ப்பட்டி, நல்லூர், திரமகாதேவி, வடுகப்பட்டி, மோகனூர், ஒருவந்தூர் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது.
சேந்தமங்கலம் துணை மின் நிலையத்தில் வருகிற 15ம் தேதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை, சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனானூர், பேரமாவூர், கொண்டமநாய்க்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துக்காப்பட்டி, புதுக்கோம்பை, பழையபாளையம், சிவநாய்க்கன்பட்டி, லக்கமநாய்க்கன்பட்டி, சாலப்பாளையம், சிவியாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.