ராசிபுரம் பகுதியில் வரும் 15ம் தேதி மின் நிறுத்தம்
ராசிபுரம் பகுதியில் வரும் 15ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் வரும் 15ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ராசிபுரம் தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ராசிபுரம் பகுதியில் அனைத்து பகுதிகளுக்கும், சீரான மின்சார விநியோகம் வழங்கிட மாதம் தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி ராசிபுரம் துணை மின்நிலையத்தில் நவ.15ம் தேதி, புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை, மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
இதனால் ராசிபுரம், முத்துக்காளிப்பட்டி, மசக்காளிப்பட்டி, புதுப்பாளையம், பட்டணம் முனியப்பம்பாளையம், வடுகம், கவுண்டம்பாளையம், முருங்கப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, மோளப்பாளையம், அரசப்பாளையம், வேலம்பாளையம், வெள்ளாளப்பட்டி, கூனவேலம்பட்டிபுதூர், கதிராநல்லூர், நத்தமேடு, கண்ணூர்ப்பட்டி, சிங்களாந்தபுரம், ஆர்.பட்டணம், குருசாமிபாளையம் மற்றும் ராசிபுரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.