/* */

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் பிப்.21ம் தேதி வாகனங்கள் ஏலம்

நாமக்கல் மாவட்டத்தில், பழைய போலீஸ் வாகனங்கள், பிப். 21ம் தேதி ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்ட காவல்துறை  சார்பில் பிப்.21ம் தேதி வாகனங்கள் ஏலம்
X

கோப்பு படம் 

இது குறித்து மாவட்ட போலீஸ் எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட பழைய வாகனங்கள் மற்றும் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 7 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 59 டூ வீலர்கள் வரும் 21ம் தேதி காலை 10 மணிக்கு, நாமக்கல் மாவட்ட போலீஸ் ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலத்தில் விடப்படவுள்ளது.

வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள் முன்பணமாக ரூ.5000, 21ம் தேதி காலை 8 மணி முதல் 9.45 மணிக்குள் ஆயுதப்படை மைதானத்தில் செலுத்த வேண்டும். வாகனத்தினை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை மற்றும் ஜிஎஸ்டி வரி செலுத்தி அப்போதே வாகனத்தினைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் ஆதார் அட்டை நகல் அல்லது டிரைவிங் லைசென்ஸ் 2 நகல்கொண்டு வர வேண்டும். மேலும் மேலும் விபரங்களுக்கு மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு ஏடிஎஸ்பி அலுவலகத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 19 Feb 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  2. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  3. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  5. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  7. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  8. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  9. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  10. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...