நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் பிப்.21ம் தேதி வாகனங்கள் ஏலம்
நாமக்கல் மாவட்டத்தில், பழைய போலீஸ் வாகனங்கள், பிப். 21ம் தேதி ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
HIGHLIGHTS
இது குறித்து மாவட்ட போலீஸ் எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட பழைய வாகனங்கள் மற்றும் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 7 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 59 டூ வீலர்கள் வரும் 21ம் தேதி காலை 10 மணிக்கு, நாமக்கல் மாவட்ட போலீஸ் ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலத்தில் விடப்படவுள்ளது.
வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள் முன்பணமாக ரூ.5000, 21ம் தேதி காலை 8 மணி முதல் 9.45 மணிக்குள் ஆயுதப்படை மைதானத்தில் செலுத்த வேண்டும். வாகனத்தினை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை மற்றும் ஜிஎஸ்டி வரி செலுத்தி அப்போதே வாகனத்தினைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் ஆதார் அட்டை நகல் அல்லது டிரைவிங் லைசென்ஸ் 2 நகல்கொண்டு வர வேண்டும். மேலும் மேலும் விபரங்களுக்கு மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு ஏடிஎஸ்பி அலுவலகத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.