Begin typing your search above and press return to search.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இலவசமாக மனு எழுதிக் கொடுக்க ஏற்பாடு
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்களுக்கு இலவசமாக கோரிக்கை மனு எழுதிக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
இது குறித்து, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பிரதிவாரம் திங்கள்கிழமை தோறும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் கோரிக்கை மனு கொடுக்க விரும்பும் பொதுமக்கள், தங்களது குறைகள் குறித்து, மனு எழுதுவதற்கு, பொது மக்களின் வசதிக்காக, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மனுக்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் அறையின் முன்புறம் உள்ள நிழற்கூடத்தில், ரெட்கிராஸ் சங்கத்தின் தன்னார்வலர்கள் மூலம் இலவசமாக மனு எழுதித்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இலவச சேவையினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.