நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை விவசாயத்திற்கு வேளாண் துறை சார்பில் சான்று வழங்கல்
நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை விவசாயத்திற்கு வேளாண்மைத்துறை சார்பில் சான்று வழங்கப்படுகிறது.
HIGHLIGHTS
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை விவசாயத்திற்கு வேளாண்மைத்துறை சார்பில் சான்று வழங்கப்படுகிறது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் ராமச்சந்திரன் கூறியுள்ளதாவது:
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதன்படி இயற்கை விளைபொருட்கள் உற்பத்தி செய்தல், பதனிடுதல் மற்றும் விற்பனைக்கு மத்திய அரசின் தேசிய அங்கக வேளாண்மை திட்டத்தின்படி அபீடா நிறுவன அங்கீகாரத்தின் அடிப்படையில் அங்ககச்சான்று எனப்படும் இயற்கை வேளாண் சான்று வழங்கப்பட்டு வருகிறது. அங்ககச்சான்று பெற தனி நபராகவோ அல்லது குழுவாகவோ பதிவு செய்யலாம். மேலும் வனப்பொருட்களை சேகரிப்பு செய்பவர்களும் பதிவு செய்து கொள்ளலாம். பெரு வணிக நிறுவனங்களும், அங்கக பொருட்களை பதப்படுத்துவோர் மற்றும் ஏற்றுமதி செய்வோரும் பதிவு செய்யலாம். இதுகுறித்து மேலும் விவரம் அறிய நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04286-291401 என்ற போன் நம்பரிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.