Begin typing your search above and press return to search.
நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நாளை ஆபரேசன் கந்துவட்டி சிறப்பு முகாம்
நாமக்கல்லில் நாளை முதல் 2 நாட்கள் காவல்துறை சார்பில் ஆபரேசன் கந்துவட்டி சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் ஆபரேசன் கந்துவட்டி, என்ற சிறப்பு குறைதீர் முகாம் நாளை 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில், காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெறுகிறது.
மாவட்ட எஸ்.பி சாய்சரன் தேஜஸ்வி, ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புகார் மனுக்களைப் பெற்று பரிசீலை செய்ய உள்ளனர்.
எனவே, கந்துவட்டி பிரச்சினைகள் சம்மந்தமான புகார்கள் இருப்பின், சம்மந்தப்பட்ட பொதுமக்கள், முகாமில் நேரடியாக கலந்துகொண்டு புகார் மனுக்களை அளித்து பயன் பெறலாம் என்று எஸ்.பி தெரிவித்துள்ளார்.