நாமக்கல்லில் அக். 13ம் தேதி ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்
Namakkal news- நாமக்கல் மாவட்டத்தில், வருகிற அக். 13ம் தேதி ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
HIGHLIGHTS
Namakkal news, Namakkal news today-இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்ட ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வருகிற அக். 13ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
மாவட்ட கலெக்டர் உமா தலைமை வகிக்கிறார். சென்னை, ஓய்வூதிய இயக்குநரக அலுவலர்கள் முன்னிலையில் கூட்டம் நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் தங்களின் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் தொடர்பான குறைகள் ஏதுமிருப்பின், அக்குறைகள் குறித்த விண்ணப்பங்களை, தேவையான இணைப்புகளோடு, 3 பிரதிகளில் 22.9.2023 ஆம் தேதிக்கு முன்னதாக, மாவட்ட கலெக்டரின், கணக்குகள் துறை நேர்முக உதவியாளருக்கு வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்விண்ணப்பத்தில் ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்கள் தங்களின் இ-மெயில் முகவரி மற்றும் செல்போன் நம்பர் முதலியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்பிய ஓய்வூதியர்கள் தவறாமல் 13.10.2023 அன்று நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களளது குறைகளை நிவர்த்தி செய்துகொள்ளலாம். அவ்வாறு கலந்து கொள்ள இயலாத ஓய்வூதியர்கள் சார்பாக யாரேனும் ஒருவர் கலந்து கொண்டு அவர்களது குறைகளை தீர்க்க முறையீடு செய்யலாம்.
மனுதாரர் கூட்டத்தில் பங்கேற்காத நிலையில் அவரது மனுவில் கண்ட குறைகள் சரிசெய்யப்பட்டுவிட்டதாக கருதப்படும். கடந்த முறை விண்ணப்பம் அளித்து குறைகள் தீர்வு செய்யப்படாமல் இருப்பின் தற்போது மீண்டும் புதியதாக விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.
மேலும் இக்குறைதீர் நாள் கூட்டத்திற்கு முன்னதாக 10.10.2023 அன்று, காலை 11.30 மணிக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) முன்பாக நடைபெறும், முன் ஆய்வுக் கூட்டத்தில் துறை அலுவலர்களோடு, மாவட்ட ஓய்வூதியர் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொள்ளலாம். இக்கூட்டத்தில் ஓய்வூதியர்கள் கலந்து கொள்ள வேண்டியதில்லை என கலெக்டர் தெரிவித்துள்ளார்.