நாமக்கல் மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் அறிவிப்பு
நாமக்கல் மாவட்டத்தில், மின்சார வாரியத்தின் சார்பில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில், மின்சார வாரியத்தின் சார்பில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது.
இது குறித்து நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மின் பகிர்மான வட்டத்தில் மாதந்தோறும், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்கீழ், மார்ச் மாதத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது.
இதனையொட்டி மார்ச் 1ம் தேதி புதன்கிழமை காலை 11 மணியளவில், நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. மார்ச் 8ம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு பரமத்தி வேலூர் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், மார்ச் 15ம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு திருச்செங்கோடு செயற்பொறியாளர் அலுவலகத்திலும், மார்ச் 17ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு பள்ளிபாளையம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 23ம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணிக்கு ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்திலும் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடைபெற உள்ளது.
மின்வாரிய குறைதீர் நாளில், சம்மந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த, மின் நுகர்வோர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று மேற்பார்வைப் பொறியாளரை சந்தித்து, தங்களின் கோரிக்கை மனுக்களை அளித்து, மின்வாரியம் சம்மந்தமான தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.