புதன்சந்தை பகுதியில் நாளை மறுநாள் மின்நிறுத்தம் அறிவிப்பு
புதன்சந்தை பகுதியில் நாளைமறுநாள் மின்சாரம் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
புதன்சந்தை பகுதியில் நாளைமறுநாள் மின்சாரம் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாமக்கல் மின்சார வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் சீரான முறையில் மின்சார விநியோகம் செய்வதற்காக, துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் நடைபெற்ற வருகிறது. இதையொட்டி, நாமக்கல் மாவட்டம், புதன்சந்தை துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் 9ம் தேதி செவ்வாய்க்கிழமை மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.
இதையொட்டி, செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, புதன்சந்தை, கொளத்துப்பாளையம், ஏளூர், தத்தாதிரிபுரம், கல்யாணி, நாட்டாமங்கலம், அம்மாபாளையம், கொழிஞ்சிப்பட்டி, புதுச்சத்திரம், பாச்சல், பிடாரிப்பட்டி, மூணுசாவடி, களங்காணி, காரைக்குறிச்சி பகுதிகளில் 9ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.