Begin typing your search above and press return to search.
நாமக்கல் அருகே கொத்தடிமை தொழிலாளி மீட்பு; ஆர்டிஓ விசாரணை
நாமக்கல் அருகே கொத்தடிமை தொழிலாளி மீட்கப்பட்டார். இதுகுறித்து ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகின்றார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள பெரியபள்ளம்பாறையில் ஒரு விவசாய தோட்டம் உள்ளது. இதில் சிதம்பரப்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (48). கூலி வேலைக்காக சேர்ந்தார்.
ரூ.30 ஆயிரம் முன் பணம் பெற்றுக்கொண்டு வேலை செய்து வந்தார். கடந்த 4 மாதங்களாக அவருக்கு சம்பளம் தரப்படவில்லை.
இதைக் கேட்ட கணேசனை தரக்குறைவாக திட்டி கொடுமைப் படுத்தியுள்ளனர். இச்சம்பவம் குறித்து கலெக்டரிடம் கணேசன் புகார் அளித்தார்.
கலெக்டர் உத்தரவின் பேரில் ஆர்.டி.ஓ கோட்டை குமார், தொழிலாளர் துறை, வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கணேசனை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.