நாமக்கல் மாவட்டத்தில் நம்ம ஊரு சூப்பர் ஊரு திட்டம் இன்று முதல் துவக்கம்
Namma Ooru - நாமக்கல் மாவட்டத்தில், நம்ம ஊரு சூப்பரு என்ற சிறப்பு சுகாதார முகாம், இன்று ஆக. 20 துவங்கி, வரும், அக். 2 வரை, நடத்தப்படுகிறது.
HIGHLIGHTS
Namma Ooru -நாமக்கல் மாவட்டத்தில், பூங்காக்கள், நீர் நிலைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் சுத்தம் செய்யும் பணிகளை, பொதுமக்கள் இயக்கமாக கொண்டு செல்வது தொடர்பான, நம்ம ஊரு சூப்பர் ஊரு திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது.
கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்து பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், நம்ம ஊரு சூப்பரு என்ற சிறப்பு சுகாதார முகாம், இன்று ஆக. 20 துவங்கி, வரும், அக். 2 வரை, நடத்தப்படுகிறது. இந்த முகாமில், குடிநீர் சுத்தம், சுகாதாரம் மற்றும் கழிவு நீர் மேலாண்மை தொடர்பாக விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். முதற்கட்டமாக, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்டம், பள்ளிக்கல்வி, உயர்கல்வி, வருவாய்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், சமூக நலம், வனத்துறை, உணவு பாதுகாப்பு, சுற்றுலா, இந்து சமய அறநிலையம் உள்ளிட்ட அனைத்துறைகள், தங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளில், பொதுமக்களுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அனைத்து அரசு அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இத்திட்டத்தின் மூலம், பொதுமக்களிடையே பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நம்ம ஊரு சூப்பர் ஊரு என்ற சிறப்பு விழிப்புணர்வு பிரசாரத்தை சிறப்பாக நடத்துவதற்கு பொறுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளி மற்றும் கல்லு?ரிகளில் தண்ணீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண் தொடர்பான பணிகள் மேற்கொள்ள வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் தங்களுக்கு அளிக்கப்பட்ட பணிகளை சிறப்பாக மேற்கொண்டு, நாமக்கல் மாவட்டத்தை தூய்மை மாவட்டமாக உருவாக்க வேண்டும் என கூறினார். பல்வேறு அரசுத்துறை துறை அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2