நாமக்கல்லில் வரும் 25ம் தேதி, மாவட்ட அளவிலான மெகா வேலை வாய்ப்பு முகாம்
namakkal news, namakkal news today- நாமக்கல்லில் வருகிற 25ம் தேதி மாவட்ட அளவிலான மெகா வேலை வாய்ப்புமுகாம் நடைபெறுகிறது.
HIGHLIGHTS
namakkal news, namakkal news today- இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரயோசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது;
நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் படித்து வேலைவாய்ப்பற்ற, ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதையொட்டி, நாமக்கல் மாவட்ட அளவிலான மெகா வேலை வாய்ப்பு முகாம், வருகிற 25ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை, நாமக்கல் திருச்சி ரோட்டில் உள்ள, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கலந்து கொண்டு பொருத்தமான நிறுவனங்களை தேர்வு செய்து, தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினை பெறலாம்.
மேலும், வேலை வாய்ப்பு முகாம்களில் கலந்து கொண்டு பணியாளர்களை தேர்வு செய்ய விரும்புகிற நிறுவனங்கள் நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாக்தில் உள்ள, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குனரை அலுவலக தொலைபேசி எண்.04286 – 281131 மூலம் தொடர்புகொண்டு, வருகிற 23ம் தேதிக்குள் தங்களின் பெயரை பதிவு செய்துகொள்ளலாம்.
எனவே, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வேலையில்லா ஆண், பெண் இருபாலரும், இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி வேலை வாய்ப்பு பெறலாம் என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.