நாமக்கல் நகராட்சியில் வார்டு வாரியாக நாளை 6 இடங்களில் கொரோனா தடுப்பூசி
நாமக்கல் நகராட்சி சார்பில் நாளை 30ம் தேதி திங்கள்கிழமை வார்டு வாரியாக, 6 இடங்களில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
HIGHLIGHTS
நாமக்கல் நகராட்சி பகுதியில் 3, 4வது வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்காக சின்னமுதலைப்பட்டியில் உள்ள நகராட்சி நடு நிலைப்பள்ளியில் தடுப்பூசி போடப்படுகிறது. வார்டு எண் 1 மற்றும் 6ல் வசிப்பவர்களுக்காக நல்லிபாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளியிலும்,
வார்டு எண் 18 ல் உள்ளவர்களுக்காக காவேட்டிப்பட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், வார்டு எண் 17ல் உள்ளவர்களுக்காக போதுப்பட்டியில் உள்ள நகராட்சி துவக்கப்பள்ளியிலும் தடுப்பூசி போடப்படுகிறது.
வார்டு எண் 29,35 மற்றும் 36 பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்காக சந்தைப்பேட்டை புதூரில் உள்ள பிள்ளையார் கோயில் சாவடியிலும், வார்டு எண் 32 மற்றும் 33 பகுதியில் உள்ளவர்களுக்கு கொசவம்பட்டி பிள்ளையார் கோயில் வளாகத்திலும் தடுப்பூசி போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவனை தடுப்பூசி செலுத்திக்கொண்டு பயனடையுமாறு நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்