/* */

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி

நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக பெய்து வரும் கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக அடிக்கடி மழை பெய்து வருகிறது. திருச்செங்கோடு, இராசிபுரம், மல்லசமத்திரம், சேந்தமங்கலம்,கொல்லிமலை, நாமகிரிப்பேட்டை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.

நாமக்கல் நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியில் இருந்து இரவு 7 மணிவரை கனமழை பெய்தது. மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளமாக ஓடியாதல் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றது.

இதனால் டூ வீலர்களில் சென்றவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர். தொடர்மழையால் மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது.

மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் உழவுப்பணிகளை துவக்கியுள்ளனர். பல இடங்களில் உள்ள மானாவாரி நிலங்களில் நிலக்கடலை, சோளம், கம்பு, ராகி போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

இன்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் நாமக்கல் மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம்: எருமப்பட்டி15 மி.மீ, குமாரபாளையம் 12.40 மி.மீ, மங்களபுரம் 15.80 மி.மீ, நாமக்கல் 25 மி.மீ, பரமத்திவேலூர் 2 மி.மீ, புதுச்சத்திரம் 8 மி.மீ, ராசிபுரம் 12.40 மி.மீ, சேந்தமங்கலம் 48 மி.மீ, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் 15 மி.மீ, கொல்லிமலை செம்மேடு மி.மீ. மாவட்டத்தில் மொத்தம் 224.6 மி.மீ மழை பெய்துள்ளது.

Updated On: 6 Sep 2021 6:16 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்