/* */

பிஎஸ்என்எல் ஊழியர் மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியரின் மனைவியை கொலை செய்த வழக்கில் சேலத்தை சேர்ந்த வாலிபருக்கு, நாமக்கல் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

பிஎஸ்என்எல் ஊழியர் மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
X

பள்ளிபாளையம் ஒட்டமெத்தையைச் சேர்ந்தவர் சுந்தரம் (67). இவர் பிஎஸ்என்எல்லில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் 13ம் தேதி மதியம், பள்ளிபாளையம் அகே பிள்ளையார்காட்டூர் பகுதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார்.

அப்போது வீட்டுக்குள் இருந்து 2 மர்மநபர்கள் அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அவரது மனைவி சாந்தகுமாரி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். வீட்டு பீரோவில் இருந்து ரூ. 10 ஆயிரம் ரொக்கம், சாந்தக்குமாரி அணிந்திருந்த தாலி, தோடு உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக பள்ளிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சேலம் அமானி கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (எ) ராஜ் (34), அவரது தம்பி ரமேஷ் (31) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் வழக்கின் மீது தீர்ப்பள்ளிக்கப்பட்டது. தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட கோவிந்தராஜூக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அவரது தம்பி ரமேஷ் வழக்கு விசாரணையின்போது இறந்து விட்டார் என்பதால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

Updated On: 30 March 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!