/* */

நிதி நிறுவனத்தில் பணம் மோசடி: ராசிபுரத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர் கைது

பைனான்ஸ் நிறுவனங்களில் பணம் பெற்று மோசடி செய்த பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

நிதி நிறுவனத்தில் பணம் மோசடி: ராசிபுரத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர் கைது
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் குமார் (31) எம்.சி.ஏ பட்டதாரி. இவர் கடந்த, 15ம் தேதி, அதே பகுதியில் தனியார் பைனான்ஸ் ஒன்றில், தனக்கு சொந்தமான தங்க நகைகளை, சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள பேங்க் ஒன்றில் அடமானம் வைத்துள்ளதாகவும், அதனை மீட்டு, அவர்களது பைனான்சில் மறு அடகு வைப்பதாக கூறி, ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் பெற்றுள்ளார்.

ஆனால், அவர் சம்மந்தப்பட்ட வங்கியில் அடமானத்தில் இருந்த தங்க நகைகளை மீட்டு தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி, ராசிபுரம் பகுதியில் உள்ள நகைக் கடை ஒன்றில் இதே காரணத்தை கூறி ரூ.5 லட்சம், 19ம் தேதி சென்னையில் 2 தனியார் பைனான்ஸ் நிறுவனங்களில் ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் என மொத்தம் ரூ. 16 லட்சத்து 90 ஆயிரம் பெற்று பணத்தை மோசடி செய்துள்ளார்.

இதையடுத்து பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 1 April 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!