Begin typing your search above and press return to search.
எருமப்பட்டியில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை: லாரி டிரைவர் கைது
எருமப்பட்டியில் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
எருமப்பட்டி சுபாஷ் சந்திரபோஸ் தெருவை சேர்ந்தவர் தினேஷ் (31). லாரி டிரைவர். இவர் வெளிமாநிலங்களுக்கு லாரிகளை ஓட்டி செல்லும் போது, அங்கிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்களை வாங்கி வந்து, அதனை எருமப்பட்டியில் விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்தது.
அதன்பேரில் எருமப்பட்டி போலீசார் அவரது வீட்டில் சோதனை செய்தபோது, அவர் குட்கா விற்பநனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, தடை செய்யப்பட்ட குட்காவை பறிமுதல் செய்தனர்.