Begin typing your search above and press return to search.
நாமக்கல் மாவட்ட விளையாட்டரங்கில் சுதந்திர தினவிழா கலைநிகழ்ச்சி ஒத்திகை
நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுகந்திர தின விழா கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடைபெற்றது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தினவிழா கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டுத் திடலில் ஆண்டுதோறும் நடைபெறும்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால், விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இந்த ஆண்டு வருகிற 15ம் தேதி நடைபெற உள்ள சுதந்திர தினவிழாவில் கலெக்டர் ஸ்ரேயாசிங் தேசியக்கொடியை ஏற்றி வைக்க உள்ளார்.
விழாவில் தியாகிகளை கவுரவித்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி, 8 தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவ மாணவிகள், 3 கல்லூரி மாணவிகள் கலந்துகொண்ட கலைநிகழ்ச்சி ஒத்திகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.