/* */

நாமக்கல் ரெட்கிராஸ் அலுவலகத்தில் மூலிகைத் தோட்டம் திறப்பு விழா

நாமக்கல் ரெட்கிராஸ் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மூலிகை தோட்டத்தை, கலெக்டர் ஸ்ரேயாசிங் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

HIGHLIGHTS

நாமக்கல் ரெட்கிராஸ் அலுவலகத்தில் மூலிகைத் தோட்டம் திறப்பு விழா
X

பைல் படம்.

நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, ரெட்கிராஸ் சொசைட்டி அலுவலகத்தில், கலெக்டர் அலுவலகத்தில் மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூலிகை தோட்டத்தில் தமிழ்நாட்டின் மாநில மலரான செங்காந்தள் மலர், மாநில மரமான பனை, தமிழ்நாட்டின் முக்கனிகளான மா, பலா, வாழை ஆகியவை நடப்பட்டுள்ளன.

மேலும் மனிதர்களின் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் சுமார் 65 வகையான மூலிகை செடிகள் இங்கு நட்ட பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த மூலிகை தோட்டத்தினை பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பார்த்து பயன் பெறலாம். இதன் துவக்க விழா ரெட்கிராஸ் மாவட்ட செயலார் ராஜேஷ்கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மூலிகை தோட்டத்தை திறந்து வைத்துப் பார்வையிட்டார். பிஆர்ஓ சீனிவாசன், ரெட்கிராஸ் சொசைட்டி உறுப்பினர்கள் மாதையன், நாகராஜன், ஆண்டனி ஜெனிட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 21 July 2022 1:30 PM GMT

Related News