Begin typing your search above and press return to search.
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 22,456 பேருக்கு கொரோனா தடுப்பூசி
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 22,456 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துப்பட்டது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே நடைபெற்ற 17 மெகா தடுப்பூசி முகாம்களில் 6 லட்சத்து 77 ஆயிரத்து 318 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 18-வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாமில், அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், அரசு பள்ளிகள் என 457 நிலையான மையங்கள்மற்றும் 37 நடமாடும் குழுக்கள் என மொத்தம் 494 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைற்ற முகாமில் மொத்தம்22,456 பேருக்கு கொரோனா முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.
டாக்டர்கள், நர்சுகள் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முகாம் பணியில் ஈடுபட்டனர்.