வேட்டாம்பாடடி கிராமத்தில் 45 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா: எம்எல்ஏ வழங்கல்
வேட்டாம்பாடி கிராமத்தில், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பட்டாக்களை, எம்எல்ஏ ராமலிங்கம் வழங்கினார்.
HIGHLIGHTS
வேட்டாம்பாடி கிராமத்தில், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பட்டாக்களை, எம்எல்ஏ ராமலிங்கம் வழங்கினார்.
தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே சென்று சிறப்பு முகாம் மூலம், விவசாய நிலம் மற்றும் வீட்டுமனைகளுக்கு உடனுக்குடன் பட்டா வழங்கும் திட்டம் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், நாமக்கல் ஊராட்சி ஒன்றியம் வேட்டாம்பாடி பஞ்சாயத்தில், விவசாயிகள் மற்றும் வீட்டு மனை உரிமையாளர்களுக்கு பட்டா தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 45 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஆர்டிஓ மஞ்சுளா, தாசில்தார் திருமுருகன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தமிழ்மணி, திமுக ஒன்றிய பொறுப்பாளர் பழனிவேல், ஊராட்சி ஒன்றிய தலைவர் சுமதி, சரஸ்வதி, நலங்கிளி, மணி, சக்திவேல், ரமேஷ், சின்னுசாமி உள்ளிட்டடோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.