Begin typing your search above and press return to search.
நாட்டுக் கோழிகளுக்கு மூலிகை மருத்துவம்: நாமக்கல்லில் 29ம் தேதி இலவச பயிற்சி
கோடை காலங்களில் நாட்டுக்கோழிகளுக்கு மூலிகை மருத்துவம் குறித்த பயிற்சி வகுப்பு வருகிற 29ம் தேதி நடைபெறுகிறது.
HIGHLIGHTS
கோடை காலங்களில் நாட்டுக்கோழிகளுக்கு மூலிகை மருத்துவம் குறித்த பயிற்சி வகுப்பு வருகிற 29ம் தேதி நடைபெறுகிறது.
நாமக்கல் திருச்சி ரோட்டில் உள்ள, கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலையின், கோழிகளுக்கான மரபுசார் மூலிகை ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில், கோடை காலத்தில் நாட்டுக்கோழிகளில் ஏற்படும் நோய்களை, மூலிகை மருத்துவத்தின் மூலம் தடுக்கும் முறைகள் என்பது குறித்த பயிற்சி முகாம், வருகிற 29ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கோழி வளர்ப்போர் 04286 233230 என்ற போன் நம்பரில் பதிவு செய்து, முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மையத்தின் தலைவர் கோபால கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.