/* */

குட்கா விற்பனை: மளிகை கடைக்காரர்கள் இருவர் கைது

மோகனூர் அருகே, குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக, மளிகை கடைக்காரர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

குட்கா விற்பனை: மளிகை கடைக்காரர்கள் இருவர் கைது
X

கோப்பு படம்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே என்.புதுப்பட்டி பகுதியில், குட்கா பொருட்கள் மளிகை கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அறிவுறுத்தலின்படி, சப் இன்ஸ்பெக்டர் ஓவியா தலைமையிலான போலீசார் என்.புதுப்பட்டி பகுதியில் பல்வேறு இடங்களில் சோதனை செய்தனர்.

அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட என்.புதுப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே உள்ள ஒரு மளிகைக்கடையில் போலீசார் சோதனை செய்தபோது அந்த கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து போலீசார் மளிகை கடையில் பதுக்கி வைத்திருந்த 10 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும் மளிகை கடைக்காரர் புஷ்பராஜ் 32 என்பவரை மோகனூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் வளையப்பட்டி பகுதியில் சோதனை நடத்தியதில், டீக்கடையில் பதுக்கி வைத்திருந்த 10 குட்கா பாக்கெட்களை போலீசார் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் குமாரவேல் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Updated On: 10 May 2021 3:50 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...