/* */

கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தேர்தலில் சுந்தர்ராஜன் தலைவராக தேர்வு

நாமக்கல்லில் இன்று நடைபெற்ற தென்மண்டல கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தலில் சுந்தர்ராஜன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள்  சங்க தேர்தலில் சுந்தர்ராஜன் தலைவராக தேர்வு
X

சுந்தர்ராஜன்.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் சுமார் 2,900 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான சுமார் 5,000க்கும் மேற்பட்ட புல்லட் கேஸ் டேங்கர் லாரிகள் இந்தியா முழுவதும் இயங்கி வருகின்றன.

இந்த சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும். 2022--2025 ஆம் ஆண்டுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, இன்று 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை, நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்க வளாகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் சங்க தலைவர், துணைத்தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் 75 செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 1,247 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்ற நிலையில் மொத்தம் 1,185 வாக்குகள் பதிவானது.

சங்கத்தின் முன்னாள் செயலாளர் எஸ்.எல்.எஸ் டிரான்ஸ்போர்ட் சுந்தர்ராஜன் தலைமையில் ஒரு அணியினரும், பிசிஎஸ் டிரான்ஸ்போர்ட் சந்திரசேகரன் தலைமையில், மற்றொரு அணியினரும் போட்டியி ட்டனர். மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன் விபரம்:

சங்க தலைவராக எஸ்எல்எஸ் டிரான்ஸ்போர்ட் சுந்தர்ராஜன், உப தலைவராக ஓ.கே. பன்னீர்செல்வம், துணைத்தலைவராக சிபிஎஸ் டிரான்ஸ்போர்ட் பிரபாகர், செயலாளராக அபிடிரான்ஸ்போர்ட் செந்தில், இணை செயலாளராக வேல்முருகன் டிரான்ஸ்போர்ட் கோபி, துணை செயலாளராக கவுசிகன், பொருளாளராக அம்மையப்பன் ஆகியோர் வெற்றி பெற்றனர். 75 செயற்குழு உறுபினர்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று 29ம் தேதி காலை 9 மணி முதல் எண்ணப்பட்டு பிற்பகல் முடிவுகள் அறிவிக்கப்படும்.

Updated On: 28 Aug 2022 3:00 PM GMT

Related News