நவீன முறையில் மண்புழு உரம் தயாரிக்க நாமக்கல்லில் இலவச பயிற்சி
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நவீன முறையில் மண்புழு உரம் தயாரித்தில் குறித்த இலவச பயிற்சி வரும் 15ம் தேதி நடைபெறுகிறது.
HIGHLIGHTS
நாமக்கல் வேளாண் அறிவியில் நிலைய (கேவிகே) தலைவர் டாக்டர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள, வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் ஜூன் 15ம் தேதி, காலை 10 மணிக்கு, நவீன முறையில் மண்புழு உரம் தயாரித்தல் என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில், மண் புழு உரத்தின் முக்கியத்துவம், மண்புழு உரம் தயாரிக்க இடம் தேர்வு செய்தல், மண்புழுவின் வகைகள், மண் புழுவை தேர்வு செய்தல், கழிவுகளை தேர்வு செய்தல், மண்புழு உரம் தயாரிக்கும் நவீன தொழில் நுட்பங்கள், மண்புழு உற்பத்தியில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய உத்திகள், மண்புழு உரம் சேகரித்தல், ஊட்டமேற்றிய மண்புழு உரம் தயார் செய்தல் குறித்து செயல் விளக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.
விவசாயிகள், விவசாய பெண்மணிகள், ஊரக இளைஞர்கள் மற்றும் ஆர்வம் உள்ள அனைவரும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள், வேளாண் அறிவியல் நிலையத்தை நேரிலோ அல்லது 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தங்களது பெயரை முன்பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.