/* */

நாமக்கல்லில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவ படத்திற்கு மலர் அஞ்சலி

நாமக்கல்லில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவ படத்திற்கு தி.மு.க.வினர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவ படத்திற்கு மலர் அஞ்சலி
X

நாமக்கல் சேலம் ரோட்டில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.முன்னாள் மாவட்ட தி.மு.க செயலாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான காந்திசெல்வன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மாவட்ட தி.மு.க. வக்கீல் அணி துணை அமைப்பாளர் சுகுமார், வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் ரவிச்சந்திரன், ஆதி திராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் சத்யபாபு, தகவல் தொடர்பு பிரிவு துணை அமைப்பாளர் சீனிவாசன், அண்ணாதுரை, மனோபாலாஜி, டேவிட், செல்வகுமார் பரமேஸ்வரி உள்ளிட்ட திரளான தி.மு.க.வினர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தினார்கள்.

Updated On: 7 Aug 2022 6:15 AM GMT

Related News