/* */

நாமக்கல் அருகே குடும்ப தகராறில் மனமுடைந்து பெண் வக்கீல் தூக்கிட்டு தற்கொலை

நாமக்கல் அருகே பெண் வக்கீல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

நாமக்கல் அருகே குடும்ப தகராறில் மனமுடைந்து பெண் வக்கீல் தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன், அவரது மனைவி நித்யா (35), இருவரும் நாமக்கல்லில் வக்கீலாக பணிபுரிந்து வந்தனர். இவர்களுக்கு டேனிஷ் (7) என்ற மகனும், தயானி (4) என்ற மகளும் உள்ளனர். குழந்தைகள் 2 பேரும் மோகனூரில் உள்ள, ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று, அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த நித்யா வீட்டில் தனியாக இருந்தபோது, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து சென்ற மோகனூர் போலீசார் நித்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நித்யாவின் தாயார் ராஜேஸ்வரி (66), மோகனூர் போலீசில் புகார் செய்தார். இதையொட்டி இன்ஸ்பெக்டர் தங்கவேல், எஸ்ஐ ஜவஹர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 24 Jun 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  3. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  5. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  6. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  7. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  8. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  9. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  10. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...