Begin typing your search above and press return to search.
தன்னைக் கடித்த பாம்புடன் வந்த விவசாயி: நாமக்கல் அரசு மருத்துவமனையில் பரபரப்பு
விவசாயி ஒருவர் தன்னைக் கடித்த பாம்புடன் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த ஓலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி (64), விவசாயி. இவர் இன்று காலை தனது தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த பாம்பு ஒன்று அவரை கடித்துவிட்டது. இதனால் அவர் அலரித்துடித்தார். அவரது அலரல் சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் அந்த பாம்பை அங்கிருந்தவர்கள் அடித்துக் கொன்றனர். தன்னைக் கடித்த அந்த பாம்பை தூக்கிக் கொண்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அவர் சிகிச்சைக்காக வந்தார். பாம்புடன் ஆஸ்பத்திரிக்குள் வந்ததால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.