முன்னாள் படைவீரர்கள் குறை கேட்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
நாமக்கல்லில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் குறைகளை மாவட்ட ஆட்சியர் உமா கேட்டறிந்தார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர்களின் விதவையர்கள் மற்றும் படைவீரர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள், நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், அவரைச் சார்ந்தோர்கள் மற்றும் படைப்பணியில் பணிபுரியும் படைவீரர்களின் குடும்பத்தார்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் அவரைச் சார்ந்தோர்கள் மற்றும் படைப்பணியில் பணிபுரியும் படைவீரர்களின் குடும்பத்தார் தங்களின் கோரிக்கைகள் குறித்த 22 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள். மனுக்களைப் பெற்று கொண்ட, மாவட்ட ஆட்சியர், மனுக்களை பரிசீலினை செய்து, உரிய அலுவலர்களிடம் வழங்கி, அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் நலத்துறை உதவி இயக்குநர் செண்பகவள்ளி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா உட்பட பலர் கலந்துகொண்டனர்.