/* */

காலிங்கராயன் அத்திக்கடவு - அவிநாசி திட்டம்: முதல்வருக்கு கொங்கு ஈஸ்வரன் நன்றி

காலிங்கராயன் அத்திக்டவு - அவிநாசி திட்டம் பெயர் சூட்ட நடவடிக்கை எடுத்துள்ள, தமிழக முதல்வருக்கு கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ நன்றி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

காலிங்கராயன் அத்திக்கடவு - அவிநாசி திட்டம்: முதல்வருக்கு கொங்கு ஈஸ்வரன் நன்றி
X

கொமதேக பொது செயலாளர் ஈஸ்வரன், எம்எல்ஏ.,

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளரும், திருச்செங்கோடு எம்எல்ஏவுமான, இ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

அவிநாசி - அத்திக்கடவு திட்டம், கொங்குநாடு பகுதி மக்களின் நீண்ட கால கனவாக இருந்து வந்தது. இந்த திட்டத்தை நிறைவேற்றக்கோரி, ஏற்கனவே எனது தலைமையில் 186 கி.மீ. நடை பயணம் நடத்தப்பட்டது. கொங்கு பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று துவக்கப்பட்ட, அவிநாசி - அத்திக்கடவு திட்டம் தற்போதைய திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் அணைப்பகுதியில் தண்ணீர் எடுக்கப்பட்டு, அவிநாசி வழியாக அன்னூர் வரை பாசன நீர் கொண்டு செல்லப்படுகிறது. 700 ஆண்டுகளுக்கு முன்பு காலிங்கராயன் அணையை, காலிங்கராயன் கட்டி, காலிங்கராயன் பாசன வாய்க்காலை நிர்மாணித்து, பவானி நதியையும், நொய்யல் நதியையும் இணைத்து, அப்போதே நதிகள் இணைப்பு செய்துள்ளார்.

தற்போது அந்த அணைக்கட்டில் இருந்து தண்ணீர் எடுப்பதால், அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தில் காலிங்கராயன் பெயரை சேர்ப்பது, பொருத்தமானது மட்டுமல்ல , அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகும். இது காலிங்கராயனுக்கு புகழ் சேர்ப்பதாக அமையும்.

எனவே இந்த திட்டத்திற்கு காலிங்கராயன் அத்திக்கடவு -அவிநாசி திட்டம் என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கடந்த ஏப். 10ம் தேதி தமிழக சட்டசபையில் பேசி வேண்டுகோள் விடுத்தேன். மேலும் இது குறித்து கடந்த ஆக. 16ம் தேதி தமிழக முதல்வரிடமும், நீர்வளத்துறை அமைச்சரிடமும் கோரிக்கை மனு அளித்தேன்.

தற்போது, தமிழக முதல்வர் மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் உத்தரவின் பேரில், இந்த திட்டத்திற்கு, காலிங்கராயன் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் என்று பெயர் சூட்டுவதற்காக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு, மாநில நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் முத்தையா, கோவை மண்டல தலைமைப் பொறியாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

காலிங்கராயன் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் பெயர் சூட்ட நடவடிக்கை எடுத்துள்ள தமிழக முதல்வர் மற்றும் நீர்பாசனத் துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்ளவதாக அந்த அறிக்கையில் ஈஸ்வரன் கூறியுள்ளார்.

Updated On: 15 Sep 2023 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்