நாமக்கல் மாவட்டத்தில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி: கிறிஸ்தவர் பங்கேற்பு
நாமக்கல் மாவட்டத்தில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியில் கிறிஸ்தவர் திரளாக பங்கேற்றனர்.
HIGHLIGHTS
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, உயிர்த்தெழுந்த நாளாக கருதப்படும் ஈஸ்டர் தினம், இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. புனித வெள்ளி தினம், இயேசு கிறிஸ்து மரிக்கும் நாளாகவும், ஈஸ்டர் தினம், அவர் உயிர்த்தெழுந்த நாளாகவும், கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கிறிஸ்தவர்களுக்கு, இது மிகவும் முக்கியமான நாளாகும். ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு, தேவாலயங்களில், இரவுநேர வழிபாட்டு கூட்டங்கள் நடத்தப்பட்டன.
கிறிஸ்தவ மக்களின் முக்கிய நிகழ்வான கிறிஸ்துமஸ்சுக்கு அடுத்து, மிக முக்கியமான பண்டிகை ஈஸ்டர் திருநாளாகும். இயேசு சிலுவையில் அறையப்பட்டு, கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு, அதில் இருந்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த தினமே ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
நாமக்கல் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் பங்கு தந்தை ஜான் அல்போன்ஸ் தலைமையில், ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை திருப்பலி, இரவு முதல் அடுத்தநாள் காலை வரை நடைபெற்றது. ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து திருப்பலியில் கலந்துகொண்டனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ சர்ச்சுகளிலும் நடைபெற்ற ஈஸ்டர் சிறப்பு பிராத்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.