/* */

மோகனூர் அரசு மாதிரி மகளிர் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு

மோகனூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

மோகனூர் அரசு மாதிரி மகளிர் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு
X

மோகனூர் அரசு மாதிரி மகளிர் பள்ளியில் நடைபெற்ற போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெண் போலீஸ் எஸ்.ஐ ஓவியா பேசினார். அருகில் டவுன் பஞ்சாயத்து தலைவர் வனிதா.

மோகனூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளி தலைமையாசிரியர் சுடரொளி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மோகனூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் வனிதா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். போலீஸ் எஸ்.ஐ ஜவகர் முன்னிலை வகித்தார். எஸ்.ஐ. ஓவியா நிகழ்ச்சியில் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டம், தற்போது, போதை பொருள் இல்லாத மாவட்டமாக மாறி வருகிறது. போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர். போதை பொருள் பயன்படுத்தவதால், பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. பல்வேறு குற்றச்செயல்களுக்கும், போதை பொருள் காரணமாக அமைகிறது. எப்படிபட்ட உறவு முறைகள் கொண்ட உறவினர்களாக இருந்தாலும், போதை பொருள் பயன்படுத்துபவர்களிடம் மாணவியர் பேசக்கூடாது என்று பேசினார்.

தொடர்ந்து, அனைவரும் போதை பொருள் தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஆசிரியர்கள், போலீசார், மாணவியர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 5 April 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!