மோகனூர் அரசு மாதிரி மகளிர் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு
மோகனூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
HIGHLIGHTS
மோகனூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியர் சுடரொளி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மோகனூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் வனிதா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். போலீஸ் எஸ்.ஐ ஜவகர் முன்னிலை வகித்தார். எஸ்.ஐ. ஓவியா நிகழ்ச்சியில் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டம், தற்போது, போதை பொருள் இல்லாத மாவட்டமாக மாறி வருகிறது. போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர். போதை பொருள் பயன்படுத்தவதால், பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. பல்வேறு குற்றச்செயல்களுக்கும், போதை பொருள் காரணமாக அமைகிறது. எப்படிபட்ட உறவு முறைகள் கொண்ட உறவினர்களாக இருந்தாலும், போதை பொருள் பயன்படுத்துபவர்களிடம் மாணவியர் பேசக்கூடாது என்று பேசினார்.
தொடர்ந்து, அனைவரும் போதை பொருள் தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஆசிரியர்கள், போலீசார், மாணவியர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.