Begin typing your search above and press return to search.
தீபாவளி பட்டாசு கடை வைக்க அக். 22 வரை விண்ணப்பிக்கலாம்: டிஆர்ஓ தகவல்
நாமக்கல் மாவட்டத்தல் தீபாவளி பண்டிகைக்காக, தற்காலிக பட்டாசு கடை வைப்பதற்கு வரும் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
HIGHLIGHTS
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட டிஆர்ஓ துர்காமூர்த்தி வெளியிட்டள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தீபாவாளி பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது இ-சேவை மையங்கள் மூலம், விண்ணப்பம் செய்யலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான கால அவகாசம் இம்மாதம் 22ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. பட்டாசுக்கடை அமைக்க விரும்புவோர் விதிமுறைக்கு உட்பட்ட விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.