பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற திருநங்கைக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற பள்ளிபாளையத்தைச் சேர்ந்த திருநங்கை மாணவிக்கு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்.
HIGHLIGHTS
திருச்செங்கோட்டில் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமையில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. அந்த முகாமில் கலந்து கொண்ட திருநங்கை ஸ்ரேயா, தனக்கு மேல்நிலைக்கல்வி தொடர உதவி செய்யுமாறு கலெக்டரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட நடடவடிக்கையின் காரணமாக பள்ளிபாளையம் கிருஷ்ணவேணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஸ்ரேயா பிளஸ் 1 வகுப்பில் அனுமதிக்கப்பட்டு படிப்பை தொடர்ந்தார். பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று, அவர் தொடர்ந்து பிளஸ் 2 வகுப்பில் படித்து வந்தார். கடந் மார்ச் மாதம் திருநங்கை ஸ்ரேயா பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினார். சமீபத்தில் வெளியான பிளஸ் பொதுத்தேர்வு முடிவில், திருங்கை ஸ்ரேயா 600க்கு 337 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். தமிழகத்திலேயே இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரு திருநங்கை ஸ்ரேயா என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார்.
இதையடுத்து அவர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங்கை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது பட்டம் பெற்று பணிக்கு செல்வதுடன் மற்றவர்களுக்கு முன்னுதாரணாக விளங்க வேண்டும், என கலெக்டர் அவருக்கு அறிவுரை வழங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.