/* */

நாமக்கல் மாவட்டத்தில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

நாமக்கல் மாவட்டத்தில், வரும் 30ம் தேதி மெகா கொரோனா தடுப்பூசி முகாமில், 1 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு
X

இது குறித்து, கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 13,84,300 கொரோனா தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை முதல் தவணை தடுப்பூசி 9,47,626 (68.46 சதவீதம்) பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 3,85,337 (27.84 சதவீதம்) பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இதில் 8,269 கர்ப்பிணி தாய்மார்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், இரண்டாம் தவணை தடுப்பூசி 868 பேருக்கும், 9,956 பாலூட்டும் தாய்மார்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், இரண்டாம் தவணை தடுப்பூசி 907 பேருக்கும், 8,500 மாற்றுத்திறனாளிகளுக்கு முதல் தவணை தடுப்பூசிஊயும், 946 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூயும் செலுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை நடந்த 6 மெகா தடுப்பூசி முகாம்களில் 3,18,523 பேர் தடுப்பூசி செலுத்தி பயன்பெற்றனர். வருகிற 30ம் தேதி சனிக்கிழமை 7ம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. 673 நிலையான முகாம்கள் மூலமாகவும், 77 நடமாடும் குழுக்கள் மூலமாகவும் மொத்தம் 750 முகாம்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. மொத்தம் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களில், 210 டாக்டர்கள், 430 நர்சுகள், 1600 அங்கன்வாடி பணியாளர்கள், 1400 தன்னார்வலர்கள், 415 பயிற்சி நர்சுகள், 265 பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் 1400 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தடுப்பூச்சி போட்டாலும், எந்தவித பத்தியமும் இன்றி எல்லாவகை உணவுகளையும் வழக்கம்போல எடுத்துக் கொள்ளலாம். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களும் எந்தவித தயக்கமும் இன்றி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 28 Oct 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!