நாமக்கல் நகராட்சியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி: எம்எல்ஏ துவக்கி வைப்பு
நாமக்கல் நகராட்சியின் ராஜாஜி நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை எம்எல்ஏ ராமலிங்கம் துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட, 39வது வார்டு, ராஜாஜி நகர் பகுதியில், கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை எம்எல்ஏ ராமலிங்கம் துவக்கி வைத்தார்.
நாமக்கல் நகராட்சி 39வது வார்டில் கழிவு நீர் வசதி இல்லாததால், மழை காலங்களில், மழை நீர் ஆங்காங்கு தேங்கி நின்றுவிடுகிறது. இதனால் நடந்து செல்வோரும், வாகனங்களில் செல்வோரும் பாதிக்கப்பட்டு வந்தனர். இதையொட்டி, ராஜாஜி நகர் பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அந்த பகுதியில், ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படுகிறது. இந்த பணி துவக்க விழா பூமி பூஜை நடைபெற்றது. நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.
நகராட்சி கவுன்சிலர் தேவராஜ், திமுக சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் உமாசங்கர், சிறுபான்மையினர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மார்ட்டின், மகளிர் அணி பொன்னி தேவராஜ் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.