Begin typing your search above and press return to search.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக்கண்டித்து காங்கிரஸ் சார்பில் சைக்கிள் பேரணி
பெட்ரோல், டீசல் விலைஉ யர்வைக் கண்டித்து நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
HIGHLIGHTS
நாமக்கல் கிழக்கு மாவட்டம், நாமக்கல் வட்டார காங்கிரஸ் சார்பில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து வள்ளிபுரத்தில் இருந்து, கீரம்பூர் வரை சைக்கிள் பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வீரப்பன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் ஒ பி சி பிரிவு துணை த்தலைவர் டாக்டர் செந்தில், மாவட்ட தொழில் முனைவோர் காங்கிரஸ் தலைவர் கதிரவன், பொதுக்குழு உறுப்பினர் பாண்டியன், எருமப்பட்டி வட்டார பொறுப்பாளர் தங்கராஜ், மாவட்ட என் ஜி ஒ பொறுப்பாளர் சக்திவேல், சாந்திமணி, பெரியசாமி, ரகு, பொன்முடி உள்ளிட்ட பலர் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனர்.