நாமக்கல்லில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட சிஐடியு தொழிற்சங்கம் சார்பாக நாமக்கல் தொழிலாளர் துறை நல வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட சிஐடியூ தலைவர் அசோகன் தலைமை வகித்தார்.
இதில் ஆன்லைன் பதிவு புதுப்பித்தல் கேட்டு மனுக்கள் பெறுதலில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து நலவாரிய மனுக்களை நேரடியாக பெற்றுக்கொள்ள வேண்டும். ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்த நாளிலிருந்து நிலுவைத் தொகையுடன் மாத ஓய்வூதியம் ரூ. 3ஆயிரம் என உயர்த்தி வழங்க வேண்டும்.
அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் விபத்து மரண இழப்பீடு ரூ.5 லட்சமும், இயற்கை மரண இழப்பீடு ரூ.2 லட்சம், ஈமச்சடங்குக்கு நிதி ரூ.25 ஆயிரம் என்று உயர்த்தி வழங்க வேண்டும்.
கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில்
சிஐடியு மாவட்ட செயலாளர் வேலுசாமி . கட்டுமான தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் சிவராஜ்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். பின்னர் சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் துறை உதவி கமிஷனர் திருநந்தனிடம் அர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.