/* */

செஸ் ஒலிம்பியாட் போட்டி: கேரள முதல்வருக்கு அழைப்பிதழ் வழங்கல்

தமிழகத்தில் நடைபெறும் சர்வதேச செஸ் ஓலிம்பியாட் போட்டி, துவக்க விழாவுக்கான அழைப்பிதழை, தமிழக முதல்வரின் சார்பில், கேரள முதல்வர் பினராயி விஜயனிடம், ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார் வழங்கினார்.

HIGHLIGHTS

செஸ் ஒலிம்பியாட் போட்டி: கேரள முதல்வருக்கு அழைப்பிதழ் வழங்கல்
X

தமிழக முதல்வர் ஸ்டாலின் சார்பில், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனிடம், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அழைப்பிதழை ராஜ்யசபா எம்.பி நாமக்கல் ராஜேஷ்குமார் வழங்கினார்.

தமிழகத்தில் முதன்முறையாக சென்னை மகாபலிபுரத்தில் நடைபெற உள்ள, சர்வதேச 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா வருகிற 28ம் தேதி நடைபெறுகிறது.

இந்த விழாவுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயனை அழைக்க, தமிழக முதல்வர் ஸ்டாலின், நாமக்கல் மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பிக்கு உத்தரவிட்டார்.

இதையொட்டி திருவனந்தபுரம் சென்ற ராஜேஷ்குமார் எம்.பி, கேரள சட்டசபை வளாகத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயனைநேரில் சந்தித்து, அவரிடம் செஸ் ஓலிம்பியாட் போட்டியின் துவக்க விழா அழைப்பிதழை தமிழக முதல்வரின் சார்பில் வழங்கினார். அப்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக முதல்வருக் நன்றி தெரிவித்தார்.

Updated On: 21 July 2022 1:30 PM GMT

Related News