நாமக்கல்லில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய பதிவை புதுப்பிக்க அழைப்பு
Tholilalar Nala Variyam-அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்கள் பதிவினை புதுப்பித்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
Tholilalar Nala Variyam-தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்கள் ஆதார் எண் மற்றும் பதிவினை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட தொழிலாளர் துறை உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்புத்துறை) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களின் குழந்தைகளின் 2020-2021 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெற, இண்டர்நெட் மூலம் ஆன்லைனில் புதுப்பித்தலுக்கான காலநீட்டிப்பு கடந்த டிச.31 அன்றுடன் முடிவுற்றது. எனவே, 1.1.2022 முதல் புதுப்பித்தல் நடப்பில் உள்ள தொழிலாளர்களுக்கு மட்டுமே நலத்திட்ட உதவிகள் வழங்க இயலும். மேலும் கல்வி பயிலும் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகைக்கு 2021-2022 ஆம் கல்வி ஆண்டுக்கு மட்டுமே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு பெற்று, புதுப்பித்தல் நடப்பில் உள்ள தொழிலாளர்கள், இண்டர்நெட் மூலம் தங்களது தகவல்களை பதிவேற்றம் செய்யாத தொழிலாளர்கள் அனைவரும், தங்களுடைய நலவாரிய அட்டையுடன் தங்களது ஆதார் எண், ரேசன் கார்டு எண், பேங்க் கணக்கு புத்தகம் மற்றும் செல்போன் நம்பர் ஆகியவற்றை டிஎன்யுடபிள்யுடபிள்யுபி.டிஎன்.ஜிஓவி.இன் என்ற வெப்சைட் முகவரியில் அப்லோட் செய்து பதிவு செய்ய வேண்டும்.
விபரங்களை பதிவேற்றம் செய்த தொழிலாளர்கள் மட்டுமே நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்க முடியும். தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு புதுப்பித்தல், கேட்புமனுக்கள் மற்றும் தகவல்களை பதிவு செய்ய அருகில் உள்ள இ-சேவை மையம் மற்றும் சிஎஸ்சி கம்ப்யூட்டர் மையம் மற்றும் பதிவு பெற்ற தொழிற்சங்கங்களை அனுகலாம் என்றும், கூடுதல் விபரங்களுக்கு 04286-280220 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2